Archive for June, 2012

[nggallery id=10]

 

நாகர்கோவில் அருள்மிகு பூர்வீக நாகதம்பிரான்ஆலய மகா கும்பாபிஷேகம் 04.06.2012 திங்கட்கிழமை நடைபெற திருவருள் கூடியுள்ளமையால் நாகதம்பிரான் அடியவர்களாகிய நீங்கள் யாவரும் வருகைதந்து மகா கும்பாபிஷேகத்தினை கண்டுகளித்து நாகேஸ்வரப் பெருமானின் அருளையும் ஆசியையும் பெற்றுய்யும் வண்ணம் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மகா கும்பாபிஷேகம் மிக குறுகிய காலத்துள் நடைபெறவிருப்பதால் மிகத்துரிதமாக நடைபெற்றுவரும் தம்பமண்டபம், மடப்பள்ளி, களஞ்சிய திருப்பணிவேலைகளை பூர்த்தி செய்வதற்கு ஒரு தொகை நிதி தேவையாக உள்ளது.

இத் திருப்பணி வேலைகளை மகா கும்பாபிஷேகத்திற்கு முன் நிறைவுசெய்ய மேலும் தங்களால் இயன்றளவு ஒரு சிறுதொகை நிதியினை வாரி வழங்கி நாகேஸ்வரப் பெருமானின் திருப்பணிவேலைகள் இனிதே நிறைவுற பங்களிப்பு வழங்குமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம். Read the rest of this entry »